Tuesday, August 25, 2020

மண் வீடுகள் thanks dinamalar

 


Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

இன்று நாம் நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை அழித்து பழமையை மறந்து வருகிறோம். இதனால் மண் வீடுகள் போன்ற மரபு சார்ந்த பாரம்பரிய வீடுகளை இழந்து விட்டோம். பாரம்பரியத்தை விரும்புவோருக்கு அதை மீட்கும் வகையில் பழங்கால மண் வீடுகளை கட்டிக்கொடுக்கிறார் இளம் கட்டடக்கலை நிபுணர் ஸ்ரீபு.

சொந்த ஊர் கோவை. கட்டடக்கலை படித்த இவர், நவீன பெண்ணாக இருந்தாலும் பழமையை பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவர். இயற்கைக்கு கெடுதி நினைக்காமல், இரும்பு, சிமென்ட் இன்றி மண், சேறு, சுட்ட கல், சுண்ணாம்பு கொண்டு பழமை மாறாது, நவீனமாக கட்டித்தருகிறார். அழகுக்கு மஞ்சள், வேப்பிலை, கடுக்காய், வெல்லம் கலந்த 'இயற்கை பூச்சு' செய்வதால் வீடு நோய் எதிர்ப்பு சக்தியுடன், கோடையில் குளிராகவும், குளிர் நேரம் வெதுவெதுப்பாக உள்ளது. சிமென்ட் வீடுகளை காட்டிலும் மண் வீடு கட்ட செலவு குறைவுதானாம்.

மும்பை, கோவை, திண்டுக்கல், கொடைக்கானலில் மண் வீடு, மூங்கில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்.தையல், துணிக்கடைகளில் வீணாகும் துணிகளை சேகரித்து கம்மல், வளையல், அலங்கார பொருட்களாக மாற்றி, இன்ஸ்டாகிராமில் 'அந்தாதி' என்ற பக்கத்தின் மூலம் பிசினஸ் செய்கிறார். வீசியெறியும் கந்தல் துணிகளையும் தானமாக பெற்று, கண்கவர் ஆபரணங்களாக்கி அசத்துகிறார். இந்த ஆபரணங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பிசியான 'பிசினஸ் உமன்' ஆக வலம் வருகிறார்.

ஸ்ரீபு கூறியது: நாம் வசிப்பதற்காக இயற்கையை அழிக்க கூடாது. இயற்கை வாரி வழங்கிய மண்ணால் வீடு கட்டித்தான் நம்முன்னோர் வாழ்ந்தனர். இன்றும் அந்த வீடுகள் கம்பீரமாக நிலைத்து நின்று, கான்கிரீட் வீடுகளுக்கு சவால் விடுகின்றன. நாகரிகத்தை தேடும் நேரத்தில் நம் பாரம்பரியத்தை மறந்து விடுகிறோம்.

மரபு வீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். வீடு கட்டும் முறை குறித்து மாணவருக்கு பயிற்சியும் அளிக்கிறேன்.பகுதிநேரமாக வீணாகும் துணிகளில் ஆபரணங்கள் செய்து ஆன்லைனில் விற்கிறேன். கொரோனா காலம் என்பதால் பிசினஸை கொஞ்சம் மாற்றி மூலிகை மாஸ்க், கிளவுஸூம் தயாரிக்கிறேன், என்றார்.

இவரை வாழ்த்த shrisha7.ss@gmail.com

Monday, August 17, 2020

சரியான வயதில் திருமணம் செய்வது thanks to dinamalar.com

 ''சரியான வயதில் திருமணம் செய்வது, வாழ்க்கை முறை, உணவு முறைகளை சரியாக பின்பற்றுவதன் வாயிலாக, குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என்கிறார் மகப்பேறு மற்றும் செயற்கை கருவூட்டல் சிறப்பு மருத்துவர் லட்சுமி கிருபா.


இன்றைக்கு தம்பதியர் மத்தியில், குழந்தை பேறு இல்லாமை அதிகரிக்க காரணம் என்ன?
கடந்த, 10,15 ஆண்டுகளாகதான், இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதற்கு காரணம் முன்பு, 20 அல்லது 25 வயதில் பலருக்கு திருமணம் ஆகிவிடும். இந்த வயது தம்பதிகளுக்கு குழந்தை உண்டாவதில் பிரச்னை வராது. இப்போது, 30 அல்லது 35 வயதில் திருமணம் செய்கின்றனர். பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்கு மேல், கர்ப்பம் தரிப்பது சிரமம்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல், கருமுட்டை உற்பத்தியும், எண்ணிக்கையும் குறைந்து விடும். உதாரணமாக, 25 வயதுள்ள ஒரு பெண்களுக்கு, கருமுட்டைகளின் எண்ணிக்கை, 25 இருந்தால், 35 வயதுள்ள பெண்ணுக்கு, 10 முட்டைகள்தான் இருக்கும். 40 வயது என்றால் ஒன்றிரண்டுதான் இருக்கும். திருமணத்தை சரியான வயதில் செய்து கொள்வது நல்லது.

குழந்தைப்பேறில் சிக்கல் இருப்பதை, எப்படி தெரிந்து கொள்வது?
சாதாரணமாக திருமணம் ஆகி, ஆறு மாதங்களில் குழந்தை உண்டாகி விடும். சிலருக்கு ஓராண்டு கூட ஆகலாம். அதற்கு மேல் தள்ளிப்போனால், டாக்டரை பார்த்து ஒரு, 'ஜெனரல் செக்கப்' செய்து கொள்வது நல்லது.

35 வயது மேல் இயற்கையாக கர்ப்பமாக வாய்ப்பு இல்லையா?
35 வயதுக்கு மேல் என்றால், ஸ்கேன் செய்து உற்பத்தியாகும் கருமுட்டைகளில் எண்ணிக்கை, மாதவிடாய் சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு, முட்டைகள் போதிய அளவு இருக்கும். 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.

குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் யார் காரணம்?
இந்த குறைபாடு, 40 சதவீதம் பெண்களிடம் உள்ளது என்றால், அதே, 40 சதவீத குறைபாடு ஆண்களிடமும் உள்ளது. 20 சதவீதம் பேருக்கு, விவரிக்க முடியாத காரணங்களால் கருத்தரித்தல் இருக்காது. ஆண்களுக்கு, புகைப்பிடித்தல், அதிக மது பழக்கம் இருந்தாலோ, சிறுவயதில் அம்மை நோயால் தாக்கப்பட்டு இருந்தாலோ, அந்தரங்க இடத்தில் 'வெரிக்கோ பீல்' இருந்தாலோ குறையும். இருவருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் பிரச்னைதான்.

குழந்தை இன்மை சிக்கல் தீர, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் என்ன மாற்றங்கள் தேவை?
வாழ்க்கை முறையும், உணவு முறையும் சரியாக இருந்தால், குழந்தை பிறப்பதில் சிக்கல் வராது. கெட்ட பழக்க வழக்கங்கள் இருப்பதால் தான், ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைகிறது. தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல், சத்தான உணவு முக்கியம். புரோட்டீன், விட்டமின் சத்து அதிகம் தேவை. உணவு தட்டில் கிரீன், ரெட், எல்லோ என, கலர்புல்லான உணவு ஐட்டங்கள் இருக்க வேண்டும். பாதம் பருப்பு, வால்நட்ஸ் நல்லது. தினசரி ஏதோ ஒரு உடற்பயிற்சி அவசியம்.

இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடலாமா?
புதிதாக கல்யாணம் ஆனவர்கள், தள்ளிப்போடுவதால் பிரச்னை வராது. லேட் மேரேஜ் செய்தவர்கள் தள்ளிப்போட்டால் பிரச்னை வரும்.

செயற்கை கருத்தரிப்பு முறையில், ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் என்ன?
போதுமான விந்தணு இல்லாதவர்களிடம், இன்ஜெக்ஷன் மூலம் எடுத்து, பெண்ணுக்கு செலுத்தும் வசதி உள்ளது. மரபணு பிரச்னை இருந்தால், சோதனையில் கண்டுபிடித்து விடலாம். விந்தையும், கருமுட்டையையும் எடுத்து, ஒன்றாக இணைத்து வளர வைத்து, தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கலாம். இப்படி இன்னும் பல நவீன முன்னேற்றங்கள் வந்துள்ளன.

Sunday, August 16, 2020

தினமும் தலைக்குக் குளிப்பது அவசியம்! - நன்றி: தினமலர் - ஆகஸ்ட் 17, 2020

 


தினமும் தலைக்குக் குளிப்பது அவசியம்!

Advertisement
 
 
Advertisement
 
 தினமும் குளிப்பது அவசியம்!
33.6kShares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

பெண்களின் தலையாய பிரச்னையான, முடி பராமரிப்பு குறித்து, சென்னை, பிரபல யுனானி மருத்துவர் தலத் சலிம்: முடி உதிர்வுக்கு மரபணு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்னைகள் என, பல காரணங்கள் இருக்கலாம். ஆரோக்கியமான முடி வேண்டும் என்றால், தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். எனினும், குளிக்கும் தண்ணீரில் அதிக ரசாயனம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறு முதல், எட்டு வாரங்களுக்கு ஒரு முறை, முடியை நுனியில் டிரிம் செய்ய வேண்டும். முடி, புரதத்தால் ஆனது. முடி ஆரோக்கியமாக இருக்க, அதிக புரதச் சத்துகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, பச்சை கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கீரையில், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி, இ, இரும்புச்சத்து, ஒமேகா - 3, பேட்டி ஆசிட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன. அதுபோல, பாதாம், வால்நட் ஆகியவற்றுடன், வைட்டமின் - டி சத்துகளும் கொடுக்க வேண்டும். வைட்டமின் பி - 12 குறைபாட்டால், இளநரை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இளநரை உள்ளவர்கள், பி - 12 மாத்திரை, டானிக் எடுத்துக் கொள்ளலாம்.அசைவம் சாப்பிடுவோர், ஆட்டு கல்லீரல் சமைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலை, நெல்லிக்காய், சீயக்காய், செம்பருத்தி இலை, சின்ன வெங்காய சாறு எடுத்து, எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தினால், இளநரை பிரச்னை தீரும். அதுபோல, காபி, டீ போன்றவற்றை நிறைய குடிக்காமல், ஒரு நாளைக்கு, ஒன்றிரண்டு கப் குடித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும். எனினும், காபி, டீக்கும், முடிக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை.முடி ஆரோக்கியமாக செழித்து வளர, தேங்காய் பாலை தலையில் தேய்த்து, அரிசி களைந்த தண்ணீரால் முடியை அலசி வர வேண்டும். மேலும், வெங்காயம், பூண்டு, நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, பேஸ்ட் ஆக்கி, தலையில், முடியில் நன்கு தடவி, 30 நிமிடங்கள் கழித்து அலசி விட வேண்டும்.வெங்காயத்தில் சல்பர் நிறைந்திருப்பதால், பொடுகுத் தொல்லை தீரும்; முடி வளர்ச்சிக்கு பாதிப்பான நுண்ணுயிரிகளை கொல்லும்.மேலும், வாரத்திற்கு இருமுறை தலையில் தயிர் தேய்த்து, ஆப்பிள் சிடார் வினிகர் தடவி, ஆன்டி டான்ட்ரப் ஷாம்பு பயன்படுத்தி, தலையை அலசி குளிக்க வேண்டும்.சிலருக்கு தலையில் பேன் தொல்லை அதிகம் இருக்கும். அத்தகையோர், ரசாயன திரவங்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து, தலைக்கு தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, நன்கு அலசி விட, படிப்படியாக பேன் தொல்லை தீரும்!


Thursday, July 23, 2020

நாக்கில் தெரியும் ஆரோக்கியம்! - நன்றி: தினமலர்


நாக்கை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி, சென்னை அசோக் நகர், 'டென்ட் ஷைன்' பல் மருத்துவமனையின்டாக்டர் ப.சிவகுமார்: 

உணவின் வாசனையை நுகர்வது வேண்டுமானால் மூக்காக இருக்கலாம். ஆனால், அந்த உணவின் சுவையை, நாக்கு தான் உறுதி செய்கிறது. மனிதகுலம் ஒவ்வொன்றும், வெவ்வேறு மொழிகள் பேச, நாக்கு தான் உதவுகிறது.மனிதனின் நாக்கு, தொண்டை பகுதியில் துவங்கி, நுனி வரை, ௭ - ௮ செ.மீ., இருக்கும். நாக்கு, எட்டு தசைகளால் ஆனது. நாக்குக்கு நரம்புகள் உண்டு என்பது தான் உண்மை.நாக்கின் மேல் புறத்தில் மொட்டு போன்ற சுவை அரும்புகள் இருக்கும். அவை தான், உணவின் சுவையை உணரச் செய்கின்றன. அதே நேரத்தில், நாக்கின் கீழ்ப்புறத்திலும், மொட்டுகள் இருக்கும். அவை, சுவை அரும்புகள் கிடையாது. 

அடிப்படையான சுவைகளான இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு போன்றவற்றை, நாக்கு தான் உணர்கிறது. முன்புறம் இனிப்பு, பின்புறம் கசப்பு என சொல்வதெல்லாம் தவறு. நாக்கின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து விதமான சுவைகளை அறிய முடியும். நாக்கில் உள்ள சுவை அரும்புகள், என்னென்ன சுவை என்பதை, மூளைக்கு எடுத்து செல்கின்றன. ஆனால், சுவை நரம்புகள் மூலம் காரம், மூளைக்கு செல்வதில்லை. அதற்கு மாறாக, அதில் உள்ள அதிக வெப்பம் மற்றும் காரம், நரம்பின் மூலமாகத் தான், மூளைக்கு செல்கிறது.இதனால் தான், அதிக காரமான உணவை உட்கொள்ளும் போது, கண்களிலும், மூக்கிலும் நீர் வந்து விடுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல் உபாதைகளை, நாக்கை வைத்தே கண்டுகொள்ளலாம். இதனால் தான், டாக்டர்கள், நாக்கை நீட்டு என்கின்றனர். 

ஆரோக்கியமான நாக்கு, இளம் சிகப்பு நிறத்தில், சற்றே சொரசொரப்பு தன்மையுடன் இருக்கும்.நாக்கின் நிறமோ, வடிவமோ மாறுபட்டால், அது ஏதோ ஒரு வகை நோயின் அறிகுறி என்பதை அறிந்து கொள்ளலாம். நாக்கில் வெள்ளை படலம் அதிகம் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் குறைந்து விட்டது என்பதை அறியலாம். சிகப்பாக இருந்தால், வைட்டமின் - பி சத்து குறைபாடு உள்ளது என்பதை அறியலாம். கறுப்பு நிறத்தில் இருந்தால், மோசமான வாய் பராமரிப்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.நாக்கை பராமரிப்பது எளிது. ஒவ்வொரு முறை, சாப்பிட்ட பிறகும், வாயை நன்கு கொப்பளித்து துப்பி, நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயை உலர்ந்த நிலையில் வைக்காமல், அடிக்கடி தண்ணீர் குடித்து, நாக்கை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கில் ஆறாத புண், வலி போன்றவை இருந்தால், டாக்டரிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்!

Saturday, July 18, 2020

ப்ளீஸ், நல்லா தூங்குங்க! thanks to dinamalar.com

ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19ஜூலை
2020
00:00
இன்று, துாக்கம் பலருக்கு, கனவு தான். துாக்கத்தை தொலைத்தோர், பல வியாதிகளுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு மனிதனும், சரியான நேரத்திற்கு துாங்க வேண்டும்; துாக்கத்தின் அளவை சரியாக வைத்திருந்தால், எந்த வியாதியும் நம்மை அண்டாது.
கடந்த, 20 ஆண்டுகளில், நாம் துாங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு, தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
இப்போது, இரவு, 9:00 மணி துாக்கம் என்பது, 10:00 மணியாகி, நள்ளிரவாகி, அதிகாலை வரை வந்து விட்டது. அதிகாலை, 3:00 - 4:00 மணி வரை கூட விழித்திருக்கின்றனர்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் துாக்கம் வராமல், இப்படி ஆவது தனி.
இரவு துாக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடி தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய், பக்கவாத நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருகிறது.

இரவு துாக்கம் தாமதமாகவும், துாக்கம் வராமலிருப்பதற்கான காரணங்கள்:
உடல் பிரச்னை மற்றும் மனக் கவலைகள் தான் இதற்கு, காரணம் என, நினைக்கிறோம். இது, உண்மை அல்ல. நாம் உறக்கத்தை தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடமும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன.
இரவு சந்தையில் தான், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இப்போது, கோடிகள் புரள்கின்றன. இரவு சந்தை என்பது, முழுக்க முழுக்க, 'டிஜிட்டல்' சந்தை.
அதிகரித்து வரும், 'காஸ்ட் ஆப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளை சமாளிக்க, தனக்கு பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும், தொழிலாளர் சட்டத்தை மதித்து, 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது, 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில், 'டார்க்கெட்'டை எட்டிப்பிடிக்க வேண்டும்.
மன உளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து, வெளியே வந்தால், கடும் போக்குவரத்து நெரிசல். அதில் சிக்கி, சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே, 'டிவி'-யை, 'ஆன்' செய்து விடுகின்றனர்.
இளம் வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில், 'பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' என, மூழ்க ஆரம்பித்து விடுகின்றனர். சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்கு சென்று விட்டால், அங்கு அதற்கான வேடம் தரித்து பலர், 'பிசி'யாகி விடுகின்றனர்.
தினமும் நள்ளிரவை தாண்டிய, 'சாட்டிங்கு'க்குப் பிறகு, 'குட்மார்னிங்' சொல்லி தான், படுக்கைக்குச் செல்கின்றனர்.
இரவு உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து, 'பேஸ்புக்'கில் போட்ட புகைப்படத்துக்கு எத்தனை, 'லைக்ஸ்' மற்றும் 'வாட்ஸ் - ஆப்'பில், குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என, அடிக்கடி பார்க்கின்றனர்.
இதை, 'கம்பல்சிவ் பிஹேவியர்' எனும், ஒரு வகையான மன நலப் பிரச்னை என்றும், 'கண்டிஷனல் இன்சோம்னியா' எனும், துாக்கமின்மை நோய் என்றும், மருத்துவர்கள் சொல்கின்றனர்.
சிலர், தினமும் காலையில் கண் விழித்ததும் செய்யும் முதல் வேலை, தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து, 'நெட் ஆன்' செய்து, 'வாட்ஸ் - ஆப்'பில் ஏதேனும் குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என, பார்ப்பது தான்.
சமூக வலைதளங்களுக்கு நாம் எந்தளவுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதை, உடனடியாக உணர வேண்டிய தருணம் இது.

இரவு துாக்கம் தடை படுவதால் ஏற்படும் பிரச்னைகள்:
நம் உடலுக்குள் மன சுழற்சி கடிகாரம் இருக்கிறது. பொதுவாக, சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலை செய்வதும், சூரியன் மறைந்த பின், இரவு உணவை முடித்து உறங்கச் செல்வதும் தான், இயற்கையோடு இணைந்த வாழ்வு.
சூரிய வெளிச்சத்தில் மட்டும் ஏன் இயங்க வேண்டும் என்பதற்கு, அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பின், இருட்டு நேரத்தில் தான், 'மெலட்டோனின்' முதலான, 'ஹார்மோன்'கள், நம் உடலில் சீராகச் சுரக்க ஆரம்பிக்கும்.
இரவு நேரத்தில், உடலுக்கு ஓய்வு தந்து, உறங்கும்போது தான், 'மெட்டபாலிசம்' எனும் வளர்சிதை மாற்றம், உடலில் சீராக நடக்கும்.
நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான, 'ஹார்மோன்' மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான, 'ஈஸ்ட்ரோஜன் - டெஸ்டோஸ்டீரான்' போன்ற பிரத்யேக, 'செக்ஸ் ஹார்மோன்கள்' சமச்சீராக சுரக்கும். முறையற்ற இரவு துாக்கத்தால் இவை சீராக உற்பத்தி செய்யப்படாமல், பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பேறின்மை பிரச்னை, இளம் தம்பதியரிடையே அதிகரித்து வருகிறது. ஒழுங்கற்ற துாக்கத்தால், பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன. மன நலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும், இது தான் காரணம்.
ஒவ்வொருவருக்கும் துாக்கம் தடை படுவதற்கு, வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, துாக்கத்தை பாதிக்கும் காரணி, வெளிச்சம் தான். மொபைல் வெளிச்சம், துாக்கத்துக்கு கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்த பின், மொபைலை நோண்ட ஆரம்பித்து விடுகின்றனர்.
மொபைலை கண்களுக்கு அருகில் வைத்து பயன்படுத்தும்போது, அந்த வெளிச்சம் நம் கண்களையும், மூளையையும் பாதிக்கும்; துாக்கத்தைத் தாமதப்படுத்தும்.
ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப, தங்களது வாழ்வியல் முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக் கொண்டால் பிரச்னை வராது.
பொதுவாக, இரவு, 9:00 மணிக்குள் உறங்குவதும். காலை, 5:00 மணிக்குள் எழுவதும் தான் சிறந்தது. அதிக துாக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல, குறைந்த துாக்கமும் ஆபத்தானது. அனைவருக்கும், எட்டு மணி நேர துாக்கம் அவசியம்.
துாங்க வேண்டிய நேரத்தில் துாங்காமல் விட்டுவிட்டு, பிற்காலத்தில் நோய் வந்து, துாக்க மாத்திரை போட்டு துாங்க முயற்சிப்பது, முட்டாள் தனம். அது நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

துாக்கம் குறைந்தாலே, சிடுசிடுப்பு வந்துவிடும்; மனம் மகிழ்ச்சியாக இருக்க, அடிப்படை தேவை, நல்ல துாக்கம்; இதோ அதற்கு சில எளிய வழிகள்...
துாங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, சாப்பிட்டு விடுங்கள். பின், 20 நிமிடத்திற்கு பின், ஒரு, 'கப்' இளஞ்சூடான பால் குடியுங்கள்; துாக்கம் கண்களை சுழற்றும்
துாங்க செல்வதற்கு முன், மது அருந்துவதோ, காபி குடிப்பதோ, புகை பிடிப்பதோ கூடாது. அதே போல், நல்ல துாக்கத்துக்கு, வயிறு நிறைய சாப்பாடும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம். நிறைய சாப்பிட்டால், அரை மணி நேரத்திற்கு பின், சின்னதாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையறை, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிச்சியாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
இரவில் நீண்ட நேரம் பாட்டு கேட்பது, மொபைலில், 'கேம்ஸ்' ஆடுவது, 'ஆடியோ புக்' படிப்பது மற்றும் 'டிவி' பார்ப்பது போன்றவைகளை தவிர்த்தாலே, நன்கு துாக்கம் வரும்
சுத்தமான படுக்கையும், உங்களுக்கு சவுகர்யமான உணர்வை கொடுக்கிற தலையணையும், துாக்கத்தின் சிறந்த நண்பர்கள். உங்கள் படுக்கையறையின், 'நைட் லேம்ப்' மெல்லிய வெளிச்சத்தை உமிழ்ந்தாலே போதும்
துாங்குவதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல் போடுங்கள்; உடம்பை துவட்டும்போதே கொட்டாவி வரும். இரவில், தளர்வான, காற்றோட்டமான, பருத்தி ஆடைகளையே அணியுங்கள்
மனதை, 'ரிலாக்ஸ்' செய்யும் புத்தகங்கள், துாக்கத்தை வரவழைக்கிற ஒரு நல்ல துணைவன்.

பா. பரத்

Sunday, July 12, 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா, யோகா மருத்துவ முறைகள்

 
74Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
சென்னை: சென்னையில் உள்ள மக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைகள் குறித்து, துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, பொதுமக்களுக்கு மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வழிமுறைகள் குறித்த விபரம்:

* கபசுர குடிநீர் பொடி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, 15 முதல், 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அது, கால் டம்ளராக வற்றிய பின் வடிகட்டி, குழந்தைகள், 30 மில்லி, பெரியவர்கள், 60 மில்லி, அளவு காலை வேளையில் அருந்த வேண்டும்

* அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்கவும்.

* சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை இருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்

* துளசி, நொச்சி, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன், மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து தினமும், 10 முதல், 15 நிமிடங்கள் நீராவி பிடிக்க வேண்டும்

* சூடான ஒரு டம்பளர் பாலில், ஒரு சிட்டிகை மஞ்சள் துாள், 3 சிட்டிகை மிளகு துாள், தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து, காலை, மாலை இருவேளை அருந்த வேண்டும்

* இஞ்சி, 5 கிராம், 10 துளசி இலை, மிளகு கால் ஸ்பூன், அதிமதுரம் அரை ஸ்பூன், மஞ்சள் துாள் கால் ஸ்பூன் எடுத்து, 250 மில்லி தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். இந்த இயற்கை மூலிகை டீயை, பெரியவர்கள், 50 மில்லி, சிறிவயர்கள், 20 மில்லி, என, தினமும் இரண்டு வேளை அருந்த வேண்டும்

* வேப்பம் பூ ரசம், துாதுவளை ரசம், மிளகு ரசம், இதில் ஏதேனும் ஒன்றை தினமும் அருந்தலாம்* நாட்டு நெல்லிக்காய் சாறு, 50 மில்லி, - துளசி சாறு, 50 மில்லி- எலுமிச்சை சாறு, 5 மில்லி, இஞ்சி சாறு, 10 மில்லி மற்றும் மஞ்சள் துாள் கால் ஸ்பூனை, 150 மில்லி, தண்ணீரில் கலந்து, இயற்கை பானம் தயாரித்து, பெரியவர்கள், 250 மில்லி, சிறியவர்கள், 100 மில்லி, என்ற அளவில் தினமும் இரண்டு வேளை அருந்தலாம்

* அண்ணாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தவும்

* தினமும், 15 முதல், 20 நிமிடம் வரை, காலை, 7:30 மணிக்குள் அல்லது மாலை, 5:00 முதல், 6:00 மணிக்குள் சூரியஒளி குளியல் எடுக்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ள

Saturday, June 27, 2020

ஹிந்துக்கள் திருந்துவது எப்போது? thanks to dinamalar.com

ஹிந்துக்கள் திருந்துவது எப்போது?

 Added : ஜூன் 20, 2020  கருத்துகள் (8)
Share

Advertisement
  ஹிந்துக்கள் திருந்துவது எப்போது?
3Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
ஹிந்துக்கள் திருந்துவது எப்போது?

நம் நாட்டிலேயே, அதிக திருக்கோவில்கள் உள்ள தமிழகத்தில், ஹிந்து கடவுள்கள், ஹிந்துக்களாலேயே அவமதிக்கப்படுகிறது. ஹிந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுப்பது, ஹிந்து தானே தவிர்த்து, பிற மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என சிந்தித்தால், ஹிந்துக்களில் பெரும்பாலானோர், தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே, ஹிந்துவாக, ஹிந்து கடவுள்களை வழிபாடு செய்கின்றனர். மற்றதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. அத்தகையவர்கள் தான், பிள்ளையாரை ரோட்டில் போட்டு உடைத்தாலும், அருகே போனாலும், ஏன் என்று தட்டி கேட்க மாட்டார்கள்.

சுயநல வழிபாடு


ஆனால், பிள்ளையாரை வழிபடுவதை விட மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களுடைய சுயநலத்திற்காக நடைபெறும் வழிபாடாக இருக்கும். அதுபோல, எந்த ஹிந்து சுவாமிகளை அவமதித்தாலும், இவர்கள் தட்டிக் கேட்க மாட்டார்கள். இவர்களுக்கு சுயநலவழிபாடே முக்கியம்; அது தான், இறைவனை வழிபடும் இலக்காக இருக்கும்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எவ்வளவு கூட்டம்... மலையப்பரை பார்க்க, ஐந்து நாட்கள் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். எங்கும் பக்தி பிரவாகம், ஊற்றெடுத்து ஓடுகிறது. எனினும், அது சுயநலமே தவிர்த்து, ஹிந்து மத மேன்மைக்காகவோ, ஹிந்து சமய உயர்வுக்காகவோ இருக்காது.
அதுபோல, 40 வருடங்களுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளிவந்த, காஞ்சிபுரம் அத்தி வரதரை பார்க்க லட்சம் பேர் திரண்டனர்; நான்கைந்து கோடி பேர், அத்தி வரதரை தரிசித்துள்ளனர்.அப்படியே, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண காட்சியை பார்க்கவும், கள்ளழகர் எதிர்சேவையை தரிசிக்கவும், கணக்கில் அடங்காத கூட்டம், ஆண்டுதோறும் கூடுவது வழக்கம். பொங்கல், தீபாவளி, மஹா சிவராத்திரி, ஸ்ரீராமநவசி, இப்படி கூறிக்கொண்டே போகலாம். இவ்வாறு, வருடத்திற்கு, 49 ஹிந்து பொது பண்டிகைகள் வருகின்றன. அவற்றில் எல்லாம், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திரளும். ஒரு நபருக்கு, 1 ரூபாய் கட்டணம் வைத்தால் கூட, ஓராண்டில், சில ஆயிரம் கோடி ரூபாய் சுலபமாக சேர்ந்து விடும்.
இந்த ஹிந்து பக்தர்களில், ஒரு சிலரை தவிர, நாட்டிற்காகவும், ஹிந்து சமயத்திற்காகவும், ஹிந்து சமயத்தை சேர்ந்தவர்களுக்காகவும் வழிபாடு செய்வோர் எண்ணிக்கை மிகக் குறைவே. தான் நன்றாக இருக்க வேண்டும்; தன் குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்று, இறைவனை வழிபடுவோர், 75 சதவீதம் பேர் இருப்பர்.மீதமுள்ள, 25 சதவீதம் பேர், தான், பொதுவாக, நாட்டிற்காக, தங்கள் சமயத்திற்காக வழிபாடு செய்பவர்களாக இருப்பர். ஹிந்துக்கள் என்று கூறி, ஹிந்து மதத்தை வழிபடுவோரிடம், ஹிந்து மதத்தின் மேன்மை பற்றி கேட்டால், பதிலளிக்கத் தெரியாது. அவரிடம் உள்ள ஹிந்து தன்மை, முழுக்க முழுக்க தன் நலம் சார்ந்ததாகவே இருக்கும். கோடை காலத்தில், வெயில் அதிகமாகும் போது, 'இறைவா, வெயில் குறைவாக இருக்க வேண்டும்; தண்ணீர் தட்டுப்பாடு தீர வேண்டும்' என, பூஜைகள், ஹோமங்கள் மேற்கொள்வர். எனினும், அவர்களுக்கு, ஹிந்து மதம் மீது பெரிய பிடிமானம் எதுவும் இருக்காது.மழையில்லை என்று இறைவனை வேண்டி, விதவிதமான பூஜைகள் நடைபெறுகின்றன. எனினும், அந்த வழிபாடுகள் தானே, நம் மதத்தின் அடையாளம் என்ற எண்ணமே, அந்த ஹிந்துக்களிடம் கிடையாது.ஹிந்து கடவுள்களை வணங்கியபடி, ஹிந்து சமயத்தின் முக்கிய தலைவரை அல்லது மதகுருவை, சிறையில் பிடித்து தள்ளவும் செய்வர். ஹிந்துக்களின் ஓட்டுகள் மெஜாரிட்டியாக உள்ளதே என்பது பற்றி, ஆட்சியாளர்கள் பயப்பட மாட்டார்கள். பல கட்சிகளில், முக்கிய தலைவர்களாக ஹிந்துக்கள் தான் உள்ளனர்; அனைத்து கட்சிகளிலும், ஹிந்துக்கள் தான், அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனினும், அவர்களுக்கு ஹிந்து என்ற உணர்வும், ஹிந்து மத பற்றும் அறவே கிடையாது; ஆனால், பிற மதங்களில் அப்படியில்லை.

அவதுாறு பரப்புவர்


இவர்கள் தான் இப்படி என்றால், மேடை ஏறி, ஹிந்து சமயச் சொற்பொழிவாற்றும் பேச்சாளர்கள், ஏற்கனவே பேசிய சமய இதிகாசங்களையே மறுபடியும் மறுபடியும் பேசுவர். ஆனாலும், அவர்கள், ஹிந்துக்களுக்கு ஒன்று என்றால், ஹிந்து மதத்திற்கு ஒரு தீங்கு என்றால், அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்; கவலைப்பட மாட்டார்கள்.மதத்திற்கும், கோவிலுக்கும், மதத்தினருக்கும் தீங்கு ஏற்பட்டாலும், இதைத்தட்டி கேட்போர், ஹிந்து மதத்தில் இல்லை. அநேகமாக, சுயநலம் ஒன்றே குறிக்கோளாக உள்ளது. ஒரு சிலர், எதிர்த்து குரல் கொடுப்பர்.
அவரை, ஜாதியின் பெயரை சொல்லி, அவர் செய்யும் தொழிலை கூறி, கேவலமாக சித்தரித்து, அவதுாறு பரப்புவர். அவ்வாறு செய்வது, பிற மதத்தினர் இல்லை; நம் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் தான்.இது போகட்டும். கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறையில் நடக்கும் அவலங்களை, நம்ம ஹிந்து கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு வேண்டியது, கோவில் உள்ளே இருக்கும் சுவாமி மட்டும் தான். அதில் உள்ள அவரின் சுயநலம் படி, கோவில் எக்கேடு கெட்டு போனாலும், நம்ம ஹிந்து கவலைப்பட மாட்டார்.
ஆனால், அந்த, அறநிலையத் துறை அதிகாரியும், ஹிந்துவாகத் தான் இருப்பார். எனினும் அவருக்கு, நம் மதம் பற்றிய புரிதல்கள் அதிகம் இருக்காது. மத வழிபாடு பற்றி அறிந்திருக்க மாட்டார். எனினும், கோவில்களை நிர்வகிக்கும், அறநிலையத் துறையில் அந்த நபர் பணியாற்றிக் கொண்டிருப்பார்.இன்னும் சில கோவில்களில், அந்த கோவில்களை கொள்ளை அடிப்பதே, அங்கு பணியாற்றும் ஹிந்து - அறநிலையத்துறை அதிகாரியாகத் தான் இருப்பார். அந்த கோவிலில் கொள்ளை அடித்து, தன் சொந்த கோவிலுக்கு நிறைய செய்வார் அல்லது சொந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் கூட மேற்கொள்வார்.

சுவர் இருந்தால் தானே, சித்திரம் எழுத முடியும். நம் கோவில்களும், அதன் உள்ளே இருக்கும் கடவுள்களும், அவற்றிற்கு பூஜைகள் செய்வோரும் நன்றாக இருந்தால் தானே, நம் மதம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எல்லாம், நாம் கூறும் ஹிந்துக்களுக்கு கிடையாது.பக்தியை, இசையால் வளர்க்கும் பாடகர்கள் இருப்பர். அவர்கள் பாடல்கள் தான், கோவில்களில் தினமும் இசைக்கப்படும். அந்த பாடல்களை கேட்டாலே, மனதில் பக்தி பெருக்கெடுத்து ஓடும். அந்த பாடகருக்காவது, நம் மதம், நம் கடவுள்கள், நம் அறநெறி மீது நல்ல நம்பிக்கை இருக்குமா என்றால், பெரும்பாலும் இருப்பதில்லை.பணத்திற்காகவே பாடுவார். பணத்திற்காக, பிற மதக் கடவுள்களைப் பற்றியும் பாடல்கள் இசைப்பார். ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள்களை பற்றியும் பிறர் உருக பேசுவோர், பலர் உண்டு. அதற்காக, லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவார். எனினும், அவராவது, ஹிந்து மதம் நன்றாக இருந்தால் தானே, நம் பிழைப்பு ஓடும் என, நினைக்க மாட்டார். இன்னும் சொல்லப் போனால், தன்னைத் தானே, ஒரு கடவுள் போல அவர் நினைத்துக் கொள்வார். அவரை வணங்குவோர் பலர் உள்ளனர். அந்த வணக்கத்திற்கான காரணத்தை, வணக்கத்திற்கு உரியவர் அறிய மாட்டார்.எனினும், இப்படித் தான் ஹிந்து மதம், காலம் காலமாக நிலைத்து நிற்கிறது. ஹிந்துவாக பிறந்தவர், தான் எந்த ஜாதியை சேர்ந்தவர் என சொல்லிக் கொள்வதில் தான் பெருமை உடையவராக இருப்பார். ஆனால், பிற மதங்களில், எந்த ஜாதியில் பிறந்தாலும், தன் மதத்தை தான் முன்னிலைப்படுத்துவார்.

அசட்டுத்தனம்


சகிப்புத்தன்மை, பரந்த மனப்பான்மை, சண்டைக்கு செல்லாத பாங்கு என, பல விதமாக, இந்த அசட்டுத்தனங்களுக்கு பெயர் வைத்துக் கொள்வர். பெரிய கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர், சாதாரண கோவிலில் பூஜை செய்யும் பூசாரியை மதிப்பதில்லை. அவரும் இறைவனைத் தானே பூஜிக்கிறார் என நினைப்பதில்லை. எனினும், நம் ஹிந்து மதம், வளர்ந்து கொண்டே வருகிறது. மதத்தின் மீது பிடிமானம் இல்லாதவர்கள்; மதத்திற்கு அச்சாணியாக விளங்கும் கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதை மறந்திருப்பர். இப்படித் தான் இருக்கிறது ஹிந்து மதம்.இனியாவது, மதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுள்களுக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும், மதத்திற்கும் கொடுங்கள். மதம் இருந்தால் தான், ஹிந்து கடவுள்கள் போற்றப்படுவர்.தவறு, பிற மதத்தினரிடம் இல்லை; நம் மதத்தினரிடம் தான் உள்ளது. அத்தகையோர் திருந்த வேண்டும்! தொடர்புக்கு: எஸ்.குலசேகரன் பத்திரிகையாளர்மொபைல் எண்: 98430 94550